முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் கடைகளுக்கு சீல்..கோவை மாநகராட்சி அதிரடி | Kovai | KC Palanisamy

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் கடைகளுக்கு சீல்..கோவை மாநகராட்சி அதிரடி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி., பழனிசாமிக்கு சொந்தமான கோவையில் உள்ள சேரன் டவரில், மாநகராட்சி அதிகாரிகள், 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். தகவல் அறிந்து வந்த கே.சி.பழனிசாமி மாநகராட்சி அதிகாரி இடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருந்தபோதும் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com