திமுக முன்னாள் எம்.பி. கொலை வழக்கில் புதிய 'ட்விஸ்ட்' ... வசமாக சிக்கிய தம்பி மகள் - விசாரணையில் வெளியான அடுத்த அதிர்ச்சி...

x
  • திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில், அவரது உடன்பிறந்த சகோதரர் மகளை, போலீசார் கைது செய்தனர்.

  • சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான்.
  • இவர், கடந்த 22 ஆம் தேதி கூடுவாஞ்சேரி அருகே காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்தார்.
  • மாரடைப்பால் உயிரிழந்ததாக கார் ஓட்டுநர் கூறிய நிலையில், மஸ்தானின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர்.
  • விசாரணையில், மஸ்தானின் மூச்சை அடக்கி கொலை செய்தது தெரியவந்தது.
  • இந்த கொலை சம்பவம் தொடர்பாக, மஸ்தானின் கார் ஓட்டுநர், அவரது தம்பி மருமகன் இம்ரான் பாஷா, அவரது சித்தி மகன் தமீம் என்ற சுல்தான், நண்பர்கள் தவுபிக் அகமது, நசீர், லோகேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • மேலும் இந்த வழக்கில் மஸ்தானின் தம்பி கவுசே ஆதாம்பாஷாவும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலையில் தொடர்புடையதாக கவுசே ஆதாம்பாஷாவின் மகள் ஹரிதா ஷாஹினாவையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
  • இந்தக் கொலை சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்