முன்னாள் தலைமை செயலர் மரணம்.. உடலுக்கு காவல் துறை மரியாதை.. ஆணை பிறப்பித்த முதல்வர்

x

முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய நூற்றாண்டு நாயகர் சபாநாயகம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார். 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆட்சிப் பணி வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்த அவர், ஆட்சிப் பணிக்கு வருவதற்கு முன்பாக இராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். நேர்மையும் துணிச்சலும் தலைமைப் பண்பும், செயல்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற சபாநாயகம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். நூற்றாண்டுகளையும் கடந்து வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய சபாநாயகத்தை கௌரவிக்கும் விதமாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்