''இந்தியா செய்தது தவறு.." - ஆஸி. முன்னாள் கேப்டன் ஓபன் டாக்

x

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் அணித்தேர்வில் இந்தியா தவறு செய்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறி உள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், முதல் இன்னிங்சை மட்டும் கருத்தில்கொண்டு அணியை இந்தியா தேர்வு செய்திருப்பதாகக் கூறினார். ஆஸ்திரேலிய அணியில் இடது கை பேட்டர்கள் அதிகமாக இருப்பதால் அஸ்வினை தேர்வு செய்திருக்கலாம் என்றும், அவர் சவாலாக விளங்கி இருப்பார் என்றும் பாண்டிங் பேசி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்