"நல்லா வெள்ளாட்டுக் கறி சாப்பிட்டு வாங்க" அழைப்பு விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்

x

வெள்ளாட்டுக்கறி சாப்பிட்டு ஆகஸ்ட் 20ல் நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு வீராவேசத்துடன் வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார். சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு டெல்லியில் அதிமுகவின் மரியாதையை மீட்டுத் தந்தவர் ஈபிஎஸ் என புகழாரம் சூட்டினார். கட்சிக்கு விரோதமாக யாரும் செயல்படக்கூடாது என்றும், மதுரை அதிமுக எழுச்சி மாநாடு மூலம் திமுகவுக்கு மிகப்பெரிய பயத்தை உருவாக்கி, அடுத்து அதிமுக ஆட்சி வந்து ஈபிஎஸ் தான் முதல்வராகப் போகிறார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்