தண்ணீர் பாட்டிலில் இப்படியெல்லாம் தகிடுதத்தமா? உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை - பொதுமக்களே உஷார்..!

x

கோவில்பட்டியில் நாலாட்டின்புதூர், கழுகுமலை ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நாலாட்டின் புதூர் பகுதியில் அவ்வழியாக வந்த மினி லோடு வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் முறையான உரிமங்கள் இன்றி குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டதும், பாட்டில்களில் ஐ.எஸ்.ஐ சான்றிதழ் உள்ளிட்ட எந்த விவரங்களும் இன்றி லேபிள் ஒட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்