கடும்கோபத்தில் ஜீப்பை அடித்து நொறுக்கிய 'மக்னா' யானைஉள்ளே சிக்கிய 6 வனத்துறையினர்..!

x

சரளைபதி பகுதியில் சுற்றித் திரிந்த மக்னா யானை, தனியார் மாந்தோப்பில் புகுந்துள்ளது. யானையை வனத்துறையினர் தேடி வந்த நிலையில், வனத்துறையினரின் ஜீப்பை மக்னா யானை தாக்கியது. இதில் ஜீப் சேதமடைந்த நிலையில், வாகன ஓட்டுநர் மணிகண்டன், வனவர் மெய்யப்பன் உள்ளிட்ட 6 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தற்போது கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்