30 ரூபாய் லஞ்சம் கேட்ட வனத்துறை ஊழியர்... ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய அதிகாரிகள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக வாகனத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஓட்டுநர் சென்றுள்ளார். அவரிடம், அங்கு பணியில் இருந்த வனத்துறை ஊழியர் 30 ரூபாய் லஞ்சம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், வாகன ஓட்டுநரை சோதனைச் சாவடி கட்டடத்திற்குள் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து, வாகன ஓட்டுனர்கள் சோதனைச்சாவடி முன்பு முற்றுகையிட்டு வனத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்