இன்று இந்தியா வருகிறார் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்

x

பிரதமர் மோடியை உக்ரைனுக்கு வர, அழைப்பு விடுக்க உள்ளார் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா.

நான்கு நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா. இந்த பயணத்தில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும் இவர் பிரதமர் மோடியை சந்தித்து உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, "ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க, இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும்" என கோரிக்கை வைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்