"கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக..." - மனம் திறந்தார் விராட் கோலி

x

"கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக..." - மனம் திறந்தார் விராட் கோலி


தான் மன ரீதியாக பலவீனப்பட்டு இருந்ததாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி மனம் திறந்து உள்ளார்.

சமீப காலமாக நட்சத்திர வீரர் விராட் கோலி சரிவர ரன்குவிப்பில் ஈடுபடாததால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், தான் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து தனியார் விளையாட்டு ஊடகத்துக்குப் பேட்டியளித்த கோலி, கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு மாதத்துக்கு தான் bat-ஐ தொடவே இல்லை எனக் கூறி உள்ளார்.மன ரீதியாக தான் பலவீனப்பட்டு இருந்ததை வெளியே சொல்வதில் தனக்கு எந்த வெட்கமும் இல்லை என்றும்,மன ரீதியாக பலவீனப்பட்டு இருப்பது மிகச் சாதாரண விஷயம்தான் என்றும், கோலி கூறி உள்ளார்.மன ரீதியான சிக்கல்களை வெளியே சொல்வதற்கு நாம் தயக்கம் காட்டுவதாகவும்,மன ரீதியாக பலவீனப்பட்டு இருப்பதைக் காட்டிலும், மன ரீதியாக பலமாக இருப்பதுபோல் நடிப்பது மிகவும் மோசமானது என்றும் விராட் கோலி பேசி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்