கால்பந்து ஜாம்பவானுக்கு பிரம்மாண்ட கவுரவம் - சுதந்திர தேவி சிலை உயரத்துக்கு மரடோனா ஓவியம்

x

அர்ஜென்டினா கலைஞர் ஒருவர், மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் மாபெரும் சுவரோவியத்தை பியூனஸ் அயர்ஸில் வரைந்துள்ளார். 2020ம் ஆண்டில் மாரடைப்பால் உயிரிழந்த மாரடோனா பல லட்ச கணக்கானவர்களால் போற்றப்பட்ட நட்சத்திர கால்பந்து வீரர் ஆவார். அவரது 62வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், முரலிஸ்ட் மார்ட்டின் ரான் என்ற ஓவியர், 17 ஆயிரம் சதுர அடி சுவரில் மரடோனாவின் சுவரோவியத்தை வரைந்துள்ளார். மேலும், 800 லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தி, நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலையின் உயரத்துக்கு மரடோனாவின் சுவரோவியத்தை வரைந்து வருவதாக அந்த ஓவியர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்