ஸ்டேடியம் உச்சியில் இருந்து கீழே விழுந்து கால்பந்து ரசிகர் பலி..அலறிய ரசிகர்கள்..பரபரப்பாகிய மைதானம்

x

அர்ஜெண்டினாவில் விளையாட்டு மைதானத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த கால்பந்து ரசிகரால் விளையாட்டு போட்டி இடைநிறுத்தப்பட்டது. பாப்லோ மார்செலோ செரானோ என்ற 53 வயதான ரசிகர், சிவோரி அல்டா விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை யாரும் தள்ளி விட்டதற்கான அறிகுறிகள் இல்லை. இதையடுத்து நடந்து கொண்டிருந்த கால்பந்து போட்டி இடைநிறுத்தப்பட்டு உடனடியாக ரசிகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்