பிரியாணியின் புதிய சாதனை - அடிச்சு 'Knock Out' பண்ண foodies

x

ஸ்விக்கி செயலியில் நேற்று ஒரே நாளில் 3.50 லட்ச பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதி நாளான நேற்று மட்டும், தங்கள் செயலியில் 3.50 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஹைதராபாத் பிரியாணிக்கு 75.4 சதவீத ஆர்டர்கள் வந்ததாக கூறியுள்ள அந்த நிறுவனம், நேற்று இரவு 10.25 மணிக்குள் நாடு முழுவதும் 61 ஆயிரம் பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதேபோல் நேற்று இரவு 9.18 மணிக்குள், இந்தியா முழுவதும் 12 ஆயிரத்து 344 பேர் கிச்சடியை ஆர்டர் செய்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்