தென்பெண்ணை ஆற்றில் பொங்கி செல்லும் நுரைகள் - அதிர்ச்சி காட்சிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் பொங்கி செல்லும் ரசாயன நுரைகளால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கனமழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 931 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநில எல்லையில் உள்ள தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் திறந்து விட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் நுரைகள் பொங்கி காட்சியளிக்கிறது.
Next Story