சென்னை அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்! மீட்பு பணிகள் தீவிரம்.. வீடுகளை விட்டு வெளியேற மக்கள் அச்சம்

x

சென்னையை அடுதத மாங்காட்டில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், ஜனனி நகர், சக்ரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. குன்றத்தூர் - குமணன்சாவடி சாலையில், கால்வாய்கள் உடைக்கப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இருந்தாலும் மழைநீர் வடியாததால், வீடுகளில் சிக்கிக் கொண்டவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் தங்குவதற்கு உரிய முகாம்கள் இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு அவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.



Next Story

மேலும் செய்திகள்