கங்கையில் கரை புரண்டோடும் வெள்ளம்...வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள்..அதிர்ச்சியில் விவசாயிகள்

x

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் கனமழை காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் சுமார் 15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், மக்கள் அவதி அடைந்துள்ளனர். விவசாய பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிராமப் புறங்களில் உள்ள சாலைகள் மழை நீரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே வெள்ள நீர் குறைவாக உள்ள பகுதிகளில் குழந்தைகள் தண்ணீரில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்