Flipcart -ல் நூதன முறையில் மோசடி... மொபைலை ஹேக் செய்த ஹேக்கர்ஸ் - கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராமத்தைச் சேர்ந்த இக்பால், அதே பகுதியில் பெரம்பு நாற்காலி மற்றும் கோரை பாய் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இக்பால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ப்ளிப்கார்டில் கணக்கு தொடங்கி, வங்கி கணக்கு மற்றும் ஆதாரை அதனுடன் இணைத்து, தவணை முறையில் பொருட்களை வாங்கி உள்ளார்.

இதனிடையே, பெங்களூரைச் சேர்ந்த ராஜி என்பவர் இக்பால் மொபைலை ஹேக் செய்து, சுமார் 33 ஆயிரத்து 700 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இக்பால் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்