திடீரென காணாமல் போன 5 வயது குழந்தை - குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

x

சென்னை மணலியில் 5 வயது குழந்தை குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணலி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மகன் குபேரன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதால் தாத்தா , பாட்டி தேடி பார்த்துள்ளனர்.

அப்போது அங்குள்ள குட்டையொன்றில் குபேரன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

திடீரென காணாமல் போன 5 வயது குழந்தை - குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்