கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் திடீர் மாயம்- காரைக்காலில் பரபரப்பு

x

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர், கடலில் மூழ்கி மாயமானதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் துறைமுகத்திலிருந்து பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 14-ம் தேதி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 15 மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். புதுச்சேரி- மாமல்லபுரம் இடையே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூறைக்காற்று வீசியதால், விசைப்படகின் பக்கவாட்டில் நின்றிருந்த தங்கசாமி என்பவர் கடலில் தவறி விழுந்தார். அவரை தேடும் பணியில் சக மீனவர்கள் மட்டுமின்றி, இந்திய கடலோர ரோந்து கப்பலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்