"நேரடியாக உங்க வங்கி கணக்கில்.." மீனவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ் | Thanthitv

x

மீன்பிடி தடைகால நிவாரண தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக, தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. தற்போது ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமலாகி உள்ளது. இந்நிலையில் மீன்பிடி தடைகால நிவாரணம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, மீனவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 13 மாவட்டங்களில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை, 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, நெல்லை மற்றும் தூத்துக்குடி மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்