மாமல்லபுரத்தில் மீன் விவசாயக் கருத்தரங்கு" ... நட்சத்திர ஓட்டலில் கண்காட்சி அரங்குகள்.

x

இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டு தேசிய மீன் விவசாயிகள் தின 2 நாள் கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், விழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மீனவர்களுடன் இணைய வழியாக மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கலந்துரையாடி குறைகளை கேட்டார். விழா நடைபெற்ற நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் மீன் வளர்ப்பு, இறால் மீன்களுக்கான தீனிகள், மீன் எண்ணெய், ஊறுகாய், மீன் பிடி சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சம் உள்ளடக்கிய 50 கண்காட்சி அரங்குகளை மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா திறந்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்