அடிபட்ட புறாவுக்கு முதலுதவி....புறாவைக் காப்பாற்றிய காவலர்

x

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடிபட்டு விழுந்த புறாவை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, புறா ஒன்று மின் விசிறியில் அடிபட்டு கீழே விழுந்தது. கீழே விழுந்து துடிதுடித்துக் கொண்டிருந்த பறாவை, காவலர் பிரபாகரன் உடனடியாக மீட்டு ரயில் நிலையத்தில் உள்ள முதலுதவி அறைக்கு எடுத்து சென்றார். அங்கிருந்த மருத்துவர்கள் புறாவுக்கு சிகிச்சை அளித்தனர். காவலரின் இந்த செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்