பழனி அருகே துப்பாக்கிச்சூடு.. 18 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு | Palani

x

பழனி அருகே துப்பாக்கிச்சூடு.. 18 தோட்டாக்கள் கண்டுபிடி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே துப்பாக்கிச் சூடு நடைப்பெற்ற இடத்தில், 18 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை, கும்பகோணத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். தோட்டத்து காவலுக்காக கும்பகோணத்தில் இருந்து கார்த்தி என்ற இளைஞரை அழைத்து வந்து பணியில் அமர்த்திய நிலையில்,நேற்று இரவு மோகன்ராஜ் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தோட்டத்து சாலையில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, கார்த்தியின் நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. இதையடுத்து, காயமடைந்த கார்த்தி பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும்,அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்து 18 துப்பாக்கி தோட்டாக்களை கண்டுபிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்