வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பயணிகள் - நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்

x

மத்தியப் பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போபால் ராணி கமலாபதி ரயில் நிலையத்திலிருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு உள்ளது. குர்வாய் கெத்தோரா ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி ஒன்றின் பேட்டரியில் தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை விரைவாக அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்