அமேசான் நிறுவனத்திற்கு அபராதம்...நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

அமேசானில் ஏமாற்றி விற்கப்பட்ட 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனுக்கு, இழப்பீடாக 83 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வாடிக்கையாளர் பெற்றுள்ளார். வேலூரை சேர்ந்த ரிஷப்குமாமர் என்பவர், அமேசான் செயலி மூலம், 8190 ரூபாய்க்கு புதிய போனை வாங்கியுள்ளார். அந்த போன், ஒரு மாதத்திற்குள் பழுதானநிலையில், வேலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாய நீதிபதி மீனாட்சி சுந்தரம், மொபைல் விலையான 8,190 ரூபாயை வழங்க வேண்டும், வாடிக்கையாளர் மன உளைச்சலுக்காக 50 ஆயிரம் அபராதம், மற்றும் வழக்கு செலவுக்காக 25 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்