"சொத்து விவரங்களை தாக்கல் செய்திடுக" - ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

x

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும், அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் தங்கள் சொத்து விவரங்களை தாக்க செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றும், சரியான காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்