விவசாயிகளுக்குள் நடந்த சண்டை.. கண்மூடிதனமாகத் துப்பாக்கிச் சூடு - 50 பேர் உயிரிழப்பு

x

நைஜீரிய நாட்டின் பெனு மாகாணத்தில் உள்ள உமோகிடி கிராமத்தில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அந்த மர்ம கும்பல் கண்மூடித் தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் அதிகமானோர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்... அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையேயான பிரச்சினையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்