கேரளாவில் பரவும் காய்ச்சல் - பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை

x
  • பத்தனம்திட்டாவில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பன்றி இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சீதாத்தோடு ஊராட்சியில் உள்ள பன்றி பண்ணையில், பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
  • இதையடுத்து பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 10 கிலோ மீட்டர் சுற்றளவில் பன்றிகளை கொண்டு செல்லவும், கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் பன்றி இறைச்சி விற்கும் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்