திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருவிழா - 3 தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் தீப ஆராதனை

x

மாசித் திருவிழாவின் ஐந்தாவது நாளை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குடைவரை வாயில் தீபாரதனை நடைபெற்றது. கோவிலின் பிரதான வாயிலில் குமரவிடங்கபெருமான், அம்பாள், சுவாமி ஜெயந்திநாதர் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமியும் அம்பாளும் சிவன் கோவிலில் இருந்து தனித்தனி சப்பரத்தில் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்