சான்று வாங்க வந்த பெண்ணிடம் ஹிஜாபை அகற்றக் கோரிய பெண் அதிகாரி - தீயாய் பரவும் வீடியோ

x

கேரள மாநிலத்தில் நகராட்சியில் சான்று கேட்ட பெண்ணிடம் ஹிஜாபை அகற்றுமாறு நகராட்சி செயலாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் சான்று வாங்குவதற்காக வந்திருந்த பெண்ணிடம், நகராட்சி செயலாளர் அனிதா தேவி என்பவர் ஹிஜாபை அகற்றுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பெண், தனது வார்டு கவுன்சிலரிடம் தெரிவித்ததையடுத்து, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்