அழுகிய நிலையில் பெண் சடலம் - இறப்பதற்கு முன் நடந்தது என்ன? - விசாரணையில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ

x

ராணிபேட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் சிசிடிவியில் பதிவாகியுள்ள மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா லதா. டிப்ளோமா செவிலியர் பட்டதாரியான இவர் 2 நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகேயுள்ள தடுப்பணையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அருகில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்த போது, இறப்பதற்கு முன் அப்பெண் மர்ம நபர் ஒருவருடன் பைக்கில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து வீடியோவில் பதிவாகியிருந்த அந்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்