சகோதரிக்கு சொத்தை கொடுத்த அப்பா.. அம்மாவை வெறி தீர வெட்டி கொன்ற கொடூரம் - கன்னியாகுமரியில் அதிர்ச்சி

x

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் 73 வயது முதியவர் பவுல். இவரது மனைவி அமலோற்பவம். இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில், மகன் மோகன்தாஸ் மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த முதியவர், தனது சொத்துக்களை இரண்டு மகள்களுக்கு எழுதி கொடுத்த நிலையில், மோகன்தாஸ் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் வந்து தகராறு செய்த மோகன்தாஸ், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெற்றோர் இருவரையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, காவல்நிலையத்தில் மகன் மோகன்தாஸ் சரணடைந்த நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்