தொடர் மழையால் அவதியுறும் விவசாயிகள் - ஊடுபயிர்களும் அழுகி வருவதாக வேதனை
தொடர் மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து முளைக்கத் துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையால் மாவட்ட முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து முளைக்கத் துவங்கி விட்டன... மேலும் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ள நிலையில், அரசு உடனடியாக கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
