காலவரையற்ற உண்ணாவிரதத்தில் விவசாயிகள்... அமைச்சர் முத்துசாமி வைத்த முக்கிய வேண்டுகோள்

x

கீழ்பவானி பாசன கால்வாயில் கட்டுமான பணிகள் நடைபெறுவதற்கு விவசாயிகள் ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். கால்வாயில் எந்த விதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கருத்து தெரிவித்து வரும் விவசாயிகளின் ஒரு தரப்பினர் கடந்த நான்கு தினங்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி,

அரசு சார்பில் ஏற்கனவே உறுதியளித்தபடி புதிய இடங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என உறுதியளித்தார். பாசன கால்வாயில் தரைப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட மாட்டாது என்றும், சேதம் அடைந்துள்ள பகுதியில் மட்டுமே கட்டுமான பணிகள் நடைபெறும் என கூறினார். ஆகவே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்