முருங்கை மரத்தில் பூச்சி மருந்து தெளிக்க புதிய இயந்திரம்.. தானியங்கி இயந்திரத்தை உருவாக்கியுள்ள விவசாயிகள்

x

ஒட்டன்சத்திரம் அருகே முருங்கை மரத்தில் பூச்சி மருந்து தெளிப்பதற்காக, விவசாயிகள் தானியங்கி இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கப்பல்பட்டியை சேர்ந்த விவசாயிகளான செல்வபிரகாஷ் மற்றும் சவடமுத்து ஆகியோர், தானியங்கி மருந்து தெளிப்பான் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். குழாய்கள் மூலம் பூச்சி மருந்தை பீய்ச்சி அடிக்கும் வகையில், இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் 4 ஏக்கர் நிலத்தில் உள்ள முருங்கை மரங்களுக்கு,1 மணி நேரத்தில் பூச்சி மருந்து தெளித்து விடலாம் எனவும், இதனால் பூச்சி மருந்து தெளிப்பதற்கான ஆட்கூலி பெருமளவில் மிச்சமாகும் எனவும், செல்வபிரகாஷூம் சவடமுத்துவும் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்