கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி - அரசுக்கு விவசாயிகள் வைத்த கோரிக்கை

x

கோவை மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதையொட்டி, ஒழுங்குமுறை கூடங்களில் அதனை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் 1 முதல் சுல்தான்பேட்டை ஒழுங்குமுறை கூடத்தில் அரவை கொப்பரை கொள்முதல் விலை 117 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து, 3,500 டன் இருப்பு நிலையை ஒழுங்குமுறை கூடம் எட்டியதால் கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் டன் கொப்பரை களத்தில் தேங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்