மேட்டூர் அணை திறப்பு குறித்து அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

x

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி குறுவை சாகுபடி நடைபெற்றதுடன், சாகுபடி பரப்பளவும் அதிகரித்தது. மேட்டூர் அணையில் தற்போது 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால், குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண் இடு பொருட்கள், உரம் மற்றும் விதைகள் போதிய அளவில் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். விவசாய கடன் வழங்குவதுடன், தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே, மேட்டூர் அணையை ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டுமென, மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்