பவுன்சர்கள், போலீசார் இருந்தும் அடித்து நொறுக்கப்பட்ட ரோகிணி தியேட்டர்.. அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்... ஆரம்பிச்சது யாரு..?

x

பவுன்சர்கள், போலீசார் இருந்தும் அடித்து நொறுக்கப்பட்ட ரோகிணி தியேட்டர்.. அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்... ஆரம்பிச்சது யாரு..?


சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில், விஜய் ரசிகர்கள் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரோகிணி திரையரங்கில் அதிகாலை ஒரு மணிக்கு துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள், விஜய்யின் வாரிசு பட பேனர்கள், கட் அவுட்டுகளை அடித்து நொறுக்கி விட்டு சென்றனர். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் திரையரங்கில் நுழைய முயன்றபோது, பவுன்சர்களும், போலீசாரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் விஜய் ரசிகர்கள் திரையரங்கின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு நுழைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்