சென்னையில் பிரபல பில்லி சூனிய மாந்திரீகவாதி மர்மமாக உயிரிழப்பு

x

சென்னை திருமங்கலம் அருகே மர்மமான முறையில் மாந்திரீகவாதி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சையது சிக்கந்தர் என்ற மாந்தரீக வாதி, வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஆவார். இவர் தம்மை நாடி வருபவர்களுக்கு, மாந்திரீகம், பில்லி சூனியம் எடுப்பது போன்றவற்றை செய்து வந்தார். இந்நிலையில் பாடி குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த இவர், தலையில் அடிபட்டு ரத்தம் வெளியேறி உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த சையது சிக்கந்தம் மீது, ஏற்கனவே திருமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளதும், அவ்வப்போது வந்து கையெழுத்து போடுவதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்