திகார் சிறையில் பிரபல ரவுடி கொலை.! - சிறைத்துறை டி.ஜி.பி. அதிரடி உத்தரவு

x


டெல்லி திகார் சிறையில் கடந்த 2ஆம் தேதி, ரவுடி தில்லு தாஜ்பூரியா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதையடுத்து அங்கிருந்த தலைமை காவலர்கள் மற்றும் வார்டன்கள் உட்பட 99 காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். கடமையில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சிறைத்துறை டி.ஜி.பி. சஞ்சய் பெனிவால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்