"பிரபல நரிக்குறவ பெண் அஸ்வினி பெண் ரவுடியாக மாறி வருகிறார்" - பறக்கும் புகார்கள்..கதறும் வியாபாரிகள்

x

சமூக வளைதலங்களில் பிரபலமான நரிக்குறவ பெண், அரசியல் கட்சி பிரமுகர்களின் பெயர்களை கூறி மிரட்டுவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த அஸ்வினி என்ற நரிக்குறவப் பெண், கடந்த 2021ம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள கோயிலில் அன்னதானம் சாப்பிட வந்தபோது விரட்டப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பிரபலமானார். இதையடுத்து, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அவருக்கு வீட்டு மனை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியது.

இந்நிலையில், நரிக்குறவப் பெண் அஸ்வினி, தனக்கு வழங்கப்பட்ட கடையில் பாசிமணிகள் விற்காமல், மற்ற கடைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களின் பெயர்களை கூறி மற்ற வியாபாரிகளை மிரட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்