பிரபல நடிகர் சரத்பாபு மறைவு... பிரதமர் முதல் முதலமைச்சர் வரை இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

x

நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், முத்து உள்ளிட்ட திரைப்படங்களையும் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகர் சரத்பாபு எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இழப்பு திரையுலகிற்கு பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ள அவர், சரத்பாபுவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது என நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு நடிகர் கமல் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் கமல், சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன என தெரிவித்துள்ளார். தமிழில் தன்னுடைய குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்றும், காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்