பிரசவத்திற்காக அழைத்து சென்ற குடும்பம்... பரிசோதனையின் போது அதிர்ந்த மருத்துவர்கள்

x

மாமியாருக்கு பயந்து வயிற்றில் துணியை வைத்து 9 மாதமாக கர்ப்பிணி போல் இளம்பெண் நடித்து வந்த சம்பவம் சிதம்பரத்தில் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக முதுநிலை பட்டதாரியான இளம்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்த போது, தான் கருத்தரிக்கவில்லை எனவும், வயிற்றில் துணியை வைத்து 5 மாதங்களாக கர்ப்பிணி போல் நடித்து வந்ததாக அதிர்ச்சிகர தகவலை கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் என்ன நடந்தது என விசாரித்த போது, ஏற்கனவே 3 முறை கருத்தரித்து கருக் கலைந்ததாகவும், 4வது முறையும் கருக்கலைந்ததால், மாமியாருக்கு பயந்து இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்