மருமகனை சரமாரி வெட்டிய மாமனார்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மருமகன்

x

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே, சொத்து தகராறில், மருமகனை மாமனாரே அரிவாளால் வெட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிந்தாமணிபேரிபுதூரை சேர்ந்த அய்யாத்துரை என்பவரின் மனைவிக்கு சொந்தமாக, தலைவன்கோட்டை குளத்திற்கு பக்கத்தில் நிலம் உள்ளது. அதனை தனக்கு எழுதி தரும்படி மனைவியின் சித்தப்பா சின்னபாண்டியிடம் சென்று கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அய்யாத்துரைக்கும், அவரின் சின்ன மாமனாரான சின்ன பாண்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டாதக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சின்னபாண்டியும் அவரது இளைய சகோதரர் அலங்காரபாண்டியும் சேர்ந்து, அய்யாத்துரையை சரிமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அய்யாத்துயை மீட்டு, ஆம்புல்ன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சின்னபாண்டி மற்றும் அவரது தம்பியான அலங்காரபாண்டியனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்