இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் அருகே சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 படுகாயம் அடைந்தனர். அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பேரிகை பகுதியை சேர்ந்த பாக்யராஜ் அவரது மனைவி, 2 மகள்கள் மற்றும் ஓலைப்பட்டி சேர்ந்த நீலகண்டன் என்பவர் படுகாயம் அடைந்தார். அனைவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் காயத்துடன், துடித்த நிலையில் ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதி மக்கள் அனைவரையும் மினி வேனில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்