ஆசை மகளின் காதலால் ஆத்திரம்... துண்டு துண்டாய் கிடந்த 'காதலன்' - மதுரையில் பயங்கரம்

x

மதுரையில், தெற்கு வாசல் பாலத்தின் கீழே உள்ள தண்டவாளத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்தி விசாரணையில், இறந்து கிடந்த நபர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த கணபதி ராஜா என தெரியவந்தது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தனியாக வசித்து வந்த கணபதி ராஜா, சரக்கு வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். கீரைத்துறை பகுதியை சேர்ந்த மாயழகு என்பவரின் 19 வயது மகளை கணபதி ராஜா 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் தந்தை மாயழகு, மகளை காதலிப்பதை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், அதனை ஏற்க மறுத்த கணபதி ராஜாவை, தந்தை மாயழகு, அவரது இரு மகன்களுடன் சேர்ந்து, சரமாரியாக வெட்டிக் கொன்று, தண்டவாளத்தில் வீசியது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்