சாலையில் அறுந்து விழுந்த பேனர்... மழையில் நனைந்தபடியே அகற்றிய பெண் காவலர் - பரவும் வீடியோ

x

சென்னையை அடுத்த குன்றத்தூரில், சாலையில் விழுந்த பேனரை, மழையில் நனைந்தபடி அகற்றிய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குன்றத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் அரசியல் கட்சியினர் வைத்திருந்த பேனர் ஒன்று, பலத்த மழை, காற்று காரணமாக, சாலையில் அறுந்து விழுந்தது. அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், வாகன ஓட்டிகளின் நலன் கருதி அந்த பேனரை அப்புறப்படுத்தினார். கொட்டும் மழையை பொருள்படுத்தாமல் அவர் பேனரை அகற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்