காதலித்து, கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு - இளமையை சிறையில் தொலைக்கும் நிலை...

x

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு 23வயது இளைஞர் பிரவீன்குமார் என்பவர் 17வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார். இதையடுத்து சிறுமிக்கு கரு கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் பிரவீன்குமாரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிரவீன்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துறை செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்