துப்பாக்கிகள் தயாரித்து போலியாக உரிமம் - போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

x

தெலங்கானா மாநிலத்தில் துப்பாக்கிகள் தயாரித்து போலியாக உரிமம் வழங்கிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹைதராபாத்தில் சொந்தமாக துப்பாக்கி தயாரித்து அதனை விற்பனை செய்து , அதற்கும் லைசென்ஸ் வழங்கியதாக புகார்கள் வந்தன. இதன்பேரில் சோதனை நடத்திய போலீசார் 7 பேரை கைது செய்தனர். இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து துப்பாக்கிளை தயார் செய்து சிங்கிள் பேரல், டபுள் பேரல் ஆகிய துப்பாக்கிகளை கொண்டு வந்து அதற்கு உரிமம் வழங்கி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 33 துப்பாக்கிகள், போலி லைசென்ஸ் புத்தகங்கள், 140 புல்லட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், இவர்களிடம் இருந்து லைசென்ஸ் பெற்றவ்ரகள் உடனே அதனை திரும்ப அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்