"கேஸ்-ஐ நான் நடத்தி தரேன்" -ரூ.1.5 லட்சத்தை ஆட்டைய போட்ட போலி வழக்கறிஞர் | Fake Advocate

x

சென்னை மடிப்பாக்கத்தில், வழக்கை நடத்துவதாகக் கூறி ஒன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த கிருத்திகா தேவி என்பவரது சொத்து தொடர்பான வழக்கு கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை, கீழ்கட்டளை அம்பாள் நகர் பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவர் நடத்தி தருவதாகக் கூறி, ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால், வழக்கு தொடர்பாக ஏதேனும் கேட்டால் பிரதாப் மழுப்பியுள்ளார். இதில் சந்தேகமடைந்த கிருத்திகா தேவி, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, பிரதாப் மிரட்டியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்